பெண்ணை கேலி செய்ததால் விடுதிக்குள் நுழைந்து பொருட்களை தாக்கிய மர்ம கும்பல்!
கர்நாடகாவில் பெல்காம் பகுதியில் இயங்கி வந்த ஆண்கள் விடுதிக்குள் நுழைந்த 20க்கும் மேற்பட்டோர் அடங்கிய மர்ம கும்பல் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியது. அப்பகுதியில் உள்ள பெண் ஒருவரை விடுதியில் இருந்தவர்கள் கேலி செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் இரும்பு கம்பி, கிரிக்கெட் மட்டை மற்றும் பல்வேறு ஆயுதங்களால் விடுதியில் இருந்த பொருட்களை சூறையாடியது. இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியானதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.





