மகனின் கண் முன்னே உயிரிழந்த தாய்..!
கேரளாவில் கொச்சின் பகுதியில் காரில் வந்த ஒருவர் திடீரென காரை சாலையோரம் நிறுத்திவிட்டு அதில் இருந்து இறங்கியுள்ளார். இதனால் அவருக்கு பின்னால் பைக்கில் வந்தவர் சற்று நிலை தடுமாறி இருக்கிறார். இதில் பைக்கில் இருந்த பெண் கீழே விழுந்துவிட்டார்.
அந்நேரம் பின்னால் வந்த லாரி அந்த பெண்ணின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பைக்கில் இருந்த அந்த பெண்ணின் கணவரும் ஆறு வயது மகனும் லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆறு வயது மகனின் கண் முன்னே தாய் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






