இன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திறக்கப்பட்ட மசூதி..!
வழிபாட்டு தலங்கள் திறக்க இன்று முதல் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் சில மாவட்டத்தில் உள்ள மசூதிகளில் கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி திறக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. காலை ஐந்தரை மணியளவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
ஆனால் குறைந்த அளவிலான நபர்களே காலை தொழுகைக்கு வந்துள்ளனர். உரிய விதிமுறைகளை பின்பற்றி மசூதி திறக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சமூக இடைவெளி மற்றும் முக கவசம் ஆகிய நடவடிக்கைகளை பின்பற்றி மசூதி திறக்கப்பட்டுள்ளது.







