மத்திய கிழக்கு மோதல் – இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை
ஈரான் -அமெரிக்கா – இஸ்ரேல் இடையேயான மோதலால் இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு உள்ளதாக மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும், ஈரான் ஆதரவு தீவிர மதப் பேச்சாளர்களை அடையாளம் கண்டு அவர்களை கண்காணிக்க வலியுறுத்தி மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.





