மதுரை மீனாட்சி அம்மனை காண வந்தவருக்கு பள்ளிவாசல் முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
மதுரையில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அந்தப் பகுதியில் உள்ள பள்ளிவாசல் சார்பில் ரோஸ் மில்க் வழங்கப்பட்டு வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் சித்திரை திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் மீனாட்சியம்மன் கோயிலில் இருந்து தெற்கு வாசலை அடுத்த மண்டபத்திற்கு வந்து பின்னர் கோயிலில் அனைவரும் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் கூடுவது வழக்கம்.
இந்த நிலையில் பக்தர்களுக்கு அந்த பகுதியில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சார்பில் ரோஸ் மில்க் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இது மதுரையின் மதன் அலுவலகத்திற்கு சான்றாக அமைந்திருக்கிறது.





