துருக்கியில் பிங்க் நிறமாக மாறியுள்ள ஏரி..!
துருக்கியின் கொன்யா நகரில் உள்ள மேல் ஒப்ருக் ஏரி குறைந்த நீர் மட்டம் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக பிங்க் நிறமாக மாறி உள்ளது. வழக்கமாக அடர் நீல நிறத்தில் இருக்கும் ஏரியின் வண்ண மாற்றத்திற்கு பாக்டீரியாக்களின் மிகப்பெரிய கட்டமைப்பே காரணம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு கிலோ மீட்டருக்கு விட்டமும், 40 மீட்டர் ஆழமும் கொண்ட ஏரியின் உப்புநீரில் பாக்டீரியாக்கள் செழித்து வளர்வதால் பிங்க் நிறமாக மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.






