சிறுமியை கடத்தி அத்துமீறல்..20 ஆண்டுகள் சிறை தண்டனை..!
போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கி பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்திற்கு உட்பட்ட காட்பாடி கிராமத்தை சேர்ந்த இளைஞர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த வழக்கு பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.





