கீழடி அகழாய்வு அறிக்கை: மத்திய அரசு விளக்கம்
கீழடி அகழாய்வு அறிக்கையை தயாரித்த மூல ஆய்வாளரிடம் மீண்டும் அறிக்கை தாக்கல் செய்ய கூறியதற்கு காரணம் என்ன என்று ராஜ்யசபாவில் திருச்சி சிவா கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், மூல ஆய்வாளரின் அறிக்கை, நிபுணர்கள் குழு ஆய்வுக்கு உட்படுத்தி சரிபார்க்கப்படும் என்றார். பின்னர், மீண்டும் அந்த ஆய்வாளரின் ஒப்புதலுடனே ஆய்வறிக்கை வெளியிடப்படும். எனத் தெரிவித்தார்.





