ஐடி ஊழியரின் தங்கச் சங்கிலியை பறித்து சென்றவன் கைது..!
சென்னை ஓஎம்ஆர் சாலையில் ஐடி ஊழியரின் தங்கச் சங்கிலியை பறித்து சென்றவனை சிசிடிவி காட்சி கொண்டு போலீசார் கைது செய்துள்ளனர். ரஞ்சித் குமார் வீரவேல் போனில் பேசியபடி நடந்து செல்கையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அவரது இரண்டு சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்று உள்ளார்.
புகார் குறித்து நிகழ்விடம் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு கண்ணகி நகர் போலீசார் விசாரித்து நிலையில் செல்போன் திருட்டு ஒன்றில் சிக்கிய ஆரேபுரத்தை சேர்ந்த சரவணன் செயின் திருடியது கண்டு பிடித்து சிறையில் அடைத்தனர்.






