இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் பலி 52,000ஆக அதிகரிப்பு
இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் காசாவில் பலியானோரின் எண்ணிக்கை 52,000க்கும் மேல் அதிகரித்துள்ளது. இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பதிலடியாக, காசாவுக்குள் புகுந்து அந்நாட்டு ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 51 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 52,243 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.





