பெட்ரோல் நிரப்புவதில் முறைகேடு.. கடுப்பான வாகன ஓட்டிகள் வாக்குவாதம்..!
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் பெட்ரோல் நிரப்புவதில் முறைகேடு நடப்பதாக கூறி பெட்ரோல் பங்கை வாகன ஓட்டிகள் முற்றுகையிட்டனர். ஒரு லிட்டில் பெட்ரோல் வாங்கினால் அதில் 100 மில்லி அளவிற்கு குறைந்து மோசடி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்ததால் அங்குள்ள ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பெட்ரோல் பங்க் ஊழியர் உடனடியாக இயந்திரத்தை மாற்றம் செய்தார். இதனை அங்குள்ளவர்கள் வீடியோ எடுத்து அனுப்பியுள்ளனர்.





