--- --:--:-- --

தமிழகத்தில் நாள்தோறும் 100 பேருக்கு பெருந்தொற்று தடுப்பூசி போடப்படும்..!

3

மிழகத்தில் நாள்தோறும் 100 பேருக்கு பெருந்தொற்று தடுப்பூசி போடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய அரசின் மருந்துக் கிடங்கு வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 2கோடி தடுப்பூசிகளை பாதுகாக்கும் வசதி தமிழகத்தில் உள்ளதாக குறிப்பிட்டார்.

 

மத்திய அரசு அனுமதி அளித்த மறுநாளே தடுப்பூசிகள் போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்றும், நாள்தோறும் 100 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

 

முதியவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply

Right Menu Icon