கூடுதலாக தேர்தல் அலுவலர்கள் நியமனம்..!
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிக்காக கூடுதலாக உதவி தேர்தல் அலுவலர்களை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதற்காக, பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், ஒவ்வொரு தொகுதிக்கும் 5 முதல் 20 பேர் வரை நியமிக்கப்பட்டுள்ளனர். ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.





