பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை..!
பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கிறது. வேண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
எஸ் பி பாலசுப்ரமணியம் சிகிச்சை அளிக்க அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டு மருத்துவர்களின் ஆலோசனை பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில்கொரொனா பாதித்த பலருக்கு எக்மோ கருவியின் துணையுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே அங்கு சிகிச்சை அளிப்பதில் அங்குள்ள மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.







