பாம்புக்கு முத்தம் கொடுக்க முயன்றதால் நிகழ்ந்த கோர சம்பவம்..!
கர்நாடக மாநிலம் ஷிமோகா அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்பை பிடித்தனர். அதற்கு முத்தம் கொடுக்க முயன்றதால் பாம்பு திடீரென கடித்தது. நாகபாம்பு ஒன்று இருந்ததை கண்டு பிடிக்கும் நபருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு வந்த நபர் பாம்பை பிடித்து விட்டு அதற்கு முத்தம் கொடுக்க முயற்சி செய்துள்ளார். அப்பொழுது ஆக்ரோஷமாக இருந்த அந்த பாம்பு அந்த நபரை திடீரென கடித்தது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.






