--- --:--:-- --

தேனியில் வெளுத்து வாங்கும் கனமழை..!

4

தேனி மாவட்டத்தை பொறுத்தவரை சுற்றுலாப் பயணிகள் சுற்றி பார்க்க பல்வேறு சுற்றுலா தளங்கள் இருந்தாலும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக கும்பக்கரை அருவி அமைந்துள்ளது.

 

அதனால் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவிக்கு செல்வது வழக்கம்.கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்யும் சமயத்தில் நீர்வரத்து அதிகரித்து கும்பகரை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றது.

 

வடகிழக்கு பருவமழை தொடங்கி தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதினால் ஆங்காங்கே நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றது.மேலும் கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்ததால் கும்பக்கரை அருவிக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் தேனி மாவட்டம் மற்றும் கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

அதனால் சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவிக்கு செல்ல தடை விதித்து வனத்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவியில் குளிக்க வனத்துறையினர் சார்பாக தடை விதிக்கப்பட்டுள்ளது தேனியின் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு தினந்தோறும் வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

Right Menu Icon