மகிழ்ச்சியில் பிரியாணி சாப்பிட்ட மணமகன் உயிரிழப்பு..!
புதுச்சேரியில் இரண்டு நாட்களில் திருமணம் ஆகப்போகும் மகிழ்ச்சியில் பிரியாணி சாப்பிட்டு உறங்க சென்ற புதுமாப்பிள்ளை நடுஇரவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்காலை அடுத்த பகுதியை சேர்ந்த சந்திரமோகனுக்கு நாளை திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சந்திரமோகன் சந்தோஷ மிகுதியால் அதிகளவில் பிரியாணி சாப்பிட்டு விட்டு உறங்க சென்றுள்ளார்.
நள்ளிரவில் சந்திரமோகன் எழுப்பியும் எழாததால் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் உடற்கூறு ஆய்வில் அவர் சாப்பிட்ட பிரியாணி காரணமாக உணவுக்குழல் மற்றும் மூச்சுக்குழலில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்தது தெரியவந்தது.







