பள்ளிகளை மூட அரசு உத்தரவு..!
அசாமில் அரசால் நடத்தப்படும் 34 பள்ளிகளில் படித்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வில் தேர்ச்சி பெறாத நிலையில் பள்ளிகளை மூட அரசு முடிவு செய்துள்ளது.
கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தேர்ச்சி விகிதம் கொண்ட பள்ளிகளுக்கு மக்களின் வரி பணத்திலிருந்து செலவு செய்வது அர்த்தமற்றது என குறிப்பிட்டுள்ளார். பள்ளியில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்றால் அந்த பள்ளி இல்லாமல் இருப்பதே நல்லது என தெரிவித்துள்ளார்.





