அரசு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்..!
திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. ஐந்தாம் ஆண்டு படித்து வந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி காயத்ரி தனது அறையிலிருந்து வெளியே வரவில்லை.
சந்தேகம் அடைந்து கதவை உடைத்து பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் காவல் துறையினர் உடலை கைப்பற்றினர். மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.





