தூக்கில் தொங்கிய இளம்பெண்..! காரணம் கணவனா?
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே இளம் பெண் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் கணவரை போலீசார் கைது செய்தனர். ஹமானிமல்லாபுரத்தை சேர்ந்த மளிகை கடைக்காரர் அருண்குமாரும், அவரது மனைவி பூங்கொடிக்கும் அடமானம் வைத்த நகையை மீட்டு தராததால் நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இரு நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பூங்கொடி சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து அவரின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து கணவரை போலீசார் கைது செய்தனர்.






