பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவமனைக்குள் புகுந்த ராட்சத பல்லி..!
பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவமனை ஒன்றில் புகுந்த ராட்சத பல்லியால் பரபரப்பு ஏற்பட்டது. சிபு தீவு ஒன்றின் உள்ள மருத்துவமனை ஒன்றில் புகுந்த அந்த ராட்சத பள்ளியை கண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து அதனை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அந்தப் பல்லி அவர்களுக்கு போக்கு காட்டிய படி அங்குமிங்கும் சென்று இருந்தது. இறுதியில் அந்த ராட்சத பல்லி ஒருவழியாக மருத்துவமனையை விட்டு வெளியேறியதால் ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர். இந்த பல்லி எந்த வகையை சேர்ந்தது என்பது குறித்த விவரம் தெரியவில்லை.







