ககன்யான் திட்டம்.. விண்ணில் பறக்க போகும் வீரர்கள்..!
ககன்யான் திட்டம் மூலம் விண்ணில் பறக்க உள்ள நான்கு வீரர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாரா பாய் விண்வெளி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அப்பொழுது பல்வேறு உட்கட்டமைப்பு பணிகளை தொடங்கி வைத்த பிரதமர், திட்டத்தில் விண்ணில் பறக்க இருக்கும் நான்கு வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்களுக்கு மிஷன் லோகோ வழங்கப்பட்டது. விண்வெளியில் பறக்க போகும் இந்த நான்கு வீரர்களுக்கும் ரஷ்யாவின் பல்வேறு கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.





