BSNL -லில் ஒரு மாதத்துக்கு இலவச பிராட்பேண்ட் இணைய சேவை
வீட்டில் இருந்து பணி செய்பவரை ஊக்குவிக்கும் விதமாக ஒரு மாதத்திற்கு இலவச பிராட்பேண்ட் இணைய சேவை வழங்கப்படும் என பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரொனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டு அதன் ஊழியர்கள் தங்களது வீடுகளில் இருந்தே பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களை ஊக்கப்படுத்த முடிவெடுத்துள்ள பிஎஸ்என்எல் நிறுவனம் புதியதாக பிராட்பேண்ட் சேவையை பெறுபவர்கள் மற்றும் ஏற்கனவே லேண்ட்லைன் சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள்களுக்கு ஒரு மாதம் பிராட்பேண்ட் இலவச இணைய சேவையை அளிக்க அறிவித்துள்ளது. வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு வராமல் செல்போனில் தொடர்பு கொண்டு இந்த சேவையைப் பெற முடியும் எனவும் பிஎஸ்என்எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.







