பாலியல் இன்பத்தை இழந்ததற்காக ரூ. 10,000 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்..!
மத்திய பிரதேச மாநிலத்தில் 2018 ஜூலையில் இளம்பெண் கொடுத்த கூட்டு பாலியல் புகார் தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் 2020 டிசம்பரில் கைது செய்யப்பட்டார். உள்ளூர் நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் அவரை விடுவித்தது.
இந்த நிலையில் தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு 10 ஆயிரத்து 6 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என்று மத்திய பிரதேச அரசுக்கும், மாநில போலீசுக்கும் உத்தர விட கோரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
எந்த பாதிப்புக்கு எவ்வளவு நஷ்ட ஈடு வேண்டும் என மனுவில் பட்டியலிட்டுள்ளார். கடவுள் மனிதர்களுக்கு அளித்த பரிசான பாலியல் இன்பத்தை வாழ்க்கையில் இழந்ததற்காக 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் அவர் கூறுகிறார்.






