கடல் அலையில் சிக்கிய ஐந்து பேர்..அலட்சியம் செய்தால் விபரீதம்.. பரிதாபமாக போன உயிர்..!
காரைக்கால் கடற்கரைக்கு சுற்றுலா சென்று குழுவினர் கடலில் குளித்த பொழுது ராட்சத அலையில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். தஞ்சாவூர் அருகே உள்ள ஐயம்பேட்டையை சேர்ந்த அப்துல் கபூர் காரில் நண்பர்களுடன் நாகூர் தர்காவிற்கு சென்று விட்டு காரைக்கால் சென்றார்.
இளைஞர்கள் கடலில் இறங்கி குளித்த பொழுது அலையில் சிக்கிய ஐவரில் நான்கு பேர் தப்பிய நிலையில் அப்துல் கபூரை சடலமாக மீட்டனர்.





