--- --:--:-- --

ஆஸ்திரேலியாவில் புதிதாக ஐந்து பேருக்கு டெல்டா கொரோனா தொற்று..!

10

ஸ்திரேலியாவில் புதிதாக 5 பேருக்கு இந்தியாவில் பரவிவரும் உருமாறிய கொரொனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரொனா தொற்று ஆஸ்திரேலியாவில் பரவி வருவதை அடுத்து விக்டோரியா மாநிலத்தில் வரும் 10ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

 

டெல்டா என பெயரிடப்பட்டுள்ள இந்தியாவில் உருமாறிய கொரொனா தொற்றால் இதுவரை விக்டோரியாவில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon