கண் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து..!
சண்டிகரில் உள்ள கண் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் நோயாளிகள் பதற்றம் அடைந்தனர்.
மருத்துவமனையின் அடித்தளத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழப்பு எதுவும் பதிவாகாத நிலையில் நோயாளிகள் மருத்துவமனையில் காத்திருக்கும் சூழல் உருவானது.





