கேரள மாநிலம் திருச்சூரில் காட்டு யானை ஒன்று செப்டிக் டேங்கில் தவறி விழுந்து உயிரிழந்தது. விளைநிலங்களில் புகுந்த காட்டு யானை நீண்ட நாட்களாக செயல்படாமல் இருந்த செப்டிக் டேங்கில் விழுந்தது. மூச்சுத்திணறல் ஏற்பட்டு யானை இறந்தது. தகவலறிந்து சென்ற வனத்துறையினர் உடற்கூராய்வு பிறகு யானையின் உடலை புதைத்தனர்.