போதையில் டிரைவர்.. சாலையில் பறந்த கார்..!
சத்தியமங்கலம் அருகே மது போதையில் விபத்து ஏற்படுத்திய இளைஞரை பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் பவானி சாகர் சாலையில் தாறுமாறாக வந்த கார் எதிரே வந்த காரின் மீது மோதியது.
தாறுமாறாக வந்த கார் ஓட்டுநர் காரை ஓட்டிய வரை இறக்கிவிட்டு தப்பி சென்றுள்ளார். இதையடுத்து மதுபோதையில் இருந்த அந்த நபரை பிடித்து பொதுமக்கள் தாக்கினர். இதற்கிடையே தப்பிச்சென்ற காரின் உரிமையாளர் திரும்பி வந்து பொதுமக்களிடமும் போலீசாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்பொழுது அவரும் அது போதையில் இருப்பதாக சந்தேகம் எழுந்ததால் அவரையும் விபத்து ஏற்படுத்தியவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.





