சுடுகாட்டிற்கு ரயில் பாதையில் பயணிக்கும் மக்கள்..!
சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் தண்டவாளத்தில் மரண பயத்துடன் இறந்தவர்களுக்கு இறுதி ஊர்வலம் செய்யும் அவல நிலை 10 ஆண்டுகளாக தொடர்கிறது.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த கொல்லாது குறிச்சி கிராமத்தில் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதி மக்களுக்காக அமைக்கப்பட்ட சுடுகாட்டுக்கு முறையான வழி இல்லாததால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மிக ஆபத்தான முறையில் சென்னை திருச்சி ரயில் மார்க்கெட்டின் தண்டவாளத்தில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு இறந்தவர்களின் சடலத்தை சுமந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
100 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேலாக வரும் வந்தே பாரத் ரயில். வைகை அதிவிரைவு ரயில், சரக்கு ரயில் இந்த மார்க்கத்தில் இயக்கப்படுகிறது.





