மூளை சாவடைந்தவரின் மகள் பிறந்த நாளை கொண்டாடிய மருத்துவர்கள்..!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் மூளை சாவடைந்தவரின் பெண் குழந்தையின் பிறந்த நாளை அரசு மருத்துவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
அரக்கோணம் பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த வாரம் சாலை விபத்தில் சிக்கிய ஈஸ்வரன் மூளைச்சாவடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
தந்தை இல்லாமல் இருக்கும் குழந்தையின் பிறந்தநாளை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நிர்மலாவின் வீட்டிற்கு சென்றுபரிசு பொருட்கள் மற்றும் கேக்கை வாங்கி சென்று குழந்தையுடன் பிறந்தநாளை கொண்டாடிய மருத்துவர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





