காதல் திருமணத்தால் நிகழ்ந்த தகராறு..!
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே காதல் திருமணம் செய்த விவகாரத்தில் சரமாரி தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெண்ணின் தந்தை முனுசாமி, முனுசாமி மூத்த மகள் கவியரசி அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காதல் திருமணம் செய்து கொண்ட காதலன் பெற்றோரை பெண் வீட்டார் சரமாரியாக அடித்து அரை நிர்வாணமாக அமர வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்ததாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் மேலும் யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என வேப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





