நீதிபதிக்கு நேரடியாக கொலை மிரட்டல்..!
கடந்தாண்டு மார்ச் 7 ஆம் தேதி, மதுரை மாநகரின் கீரைத்துறை காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வில்லாபுரம் கிழக்கு தெரு முனியான்டி கோவில் அருகே உள்ள கருவேலங்காட்டில் காவல்துறையினர் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். அங்கு வெள்ளை சாக்கில் கஞ்சாவுடன் நின்றிருந்த மூவரை கைது செய்தனர்.
மதுரையில் 25 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் 12 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற குற்றவாளிகள், நீதிமன்றத்தில் நீதிபதியையே கொலை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு மார்ச் 7 ஆம் தேதி, மதுரை மாநகரின் கீரைத்துறை காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வில்லாபுரம் கிழக்கு தெரு முனியான்டி கோவில் அருகே உள்ள கருவேலங்காட்டில் காவல்துறையினர் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். அங்கு வெள்ளை சாக்கில் கஞ்சாவுடன் நின்றிருந்த மூவரை கைது செய்தனர்.
சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டதில், மதுரை புதுஜெயில் ரோடு முரட்டம்பத்திரியைச் சேர்ந்த பாண்டியராஜன், அவரது சகோதரர் பிரசாந்த் மற்றும் மனைவி சரண்யா ஆகியோர் 25 கிலோ உலர் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விசாரணையில், கஞ்சா மதுரை காமராஜபுரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான வெள்ளைக்காளியின் அண்ணன் சின்னமுனுசு மகன் சண்முகவேல் என்பவரால் கொடுக்கப்பட்டதாகவும், அவர் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வாங்கி திருச்சியில் சிறைக்கு சென்றுவிட்டதாகவும் தெரிவித்தனர்.





