திருவாடானையில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு..
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோவில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, பக்தா்கள் தலையில் பால்குடம் ஏந்தி நான்கு முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்.
அதன்பின் சுந்தரவேலவருக்கு பால் அபிஷேகம், திருவாடானை கார்த்திகை வழிபாட்டு குழுவினரின் கூட்டு வழிபாடு பிரார்த்னை நடந்தது. இதனைத்தொடா்ந்து கோயில் வளாகத்தில் உள்ள துர்க்கையம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.





