30 லட்சம் பயனாளர்களின் கணக்குகள் நீக்கம்..!
இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 30 லட்சம் பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்திய புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் படி 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனங்கள் மற்றும் அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை 45 நாட்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும்.
அதன்படி வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 30 லட்சம் பயனாளர்களின் கணக்கு முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






