இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தாதா..!
சர்வதேச தீவிரவாதியும் மும்பையில் தாதாவுமான தாவுத் இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சியில் இருப்பதாக அவனது உறவினர் தெரிவித்துள்ளார்.
தாவூத்தின் மறைந்த சகோதரர் ஹசீனாவின் மகன் ஹரிஷா என்பவர் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்திய போது இந்த விவரங்களை அவர் வெளியிட்டுள்ளார்.
தப்பி ஓடிய தாவூத் இப்ராஹீம் கராச்சியில் வசித்து வருவதாகவும் பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.





