பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்!
திருவள்ளூரில் பட்டாக் கத்திகள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இருவர் கைது செய்யப்பட்டனர். கடம்பத்தூரை அடுத்த வயலூர் கிராமத்தில் இளைஞர்கள் சிலர் நண்பரின் பிறந்த நாள் விழாவை பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர்.
மேலும் அதை சமூகவலைதளத்தில் பரப்பியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிக அளவில் பரவியதையடுத்து வீடியோ தொடர்பான விசாரணை மேற்கொண்ட போலீசார் ராகு, ஸ்டீபன்ராஜ் மற்றும் அருண்குமார் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.







