இந்தியாவில் நாளுக்கு நாள் உயரும் கொரோனா பாதிப்பு..!
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1,41,000 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் கொரொனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஒரே நாளில் புதிதாக ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 986 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 222 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் தினசரி பாதிப்பு இந்த உச்சத்தை எட்டியுள்ளது. நாடு முழுவதும் கொரொனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 72 ஆயிரத்து 169 ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் 285 பேர் கொரொனா தொற்றால் இறந்துள்ளனர்.





