கேரளாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா..!
கேரளாவில் மேலும் 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு மேலாக ஒற்றை இலக்கமாக இருந்த பாதிப்பு தற்பொழுது மூன்று இலக்கத்தை எட்டியுள்ளது.
அதன்படி மேலும் 230 பேருக்கு தொற்று இருப்பதை உறுதி செய்யப்பட்டு கேரளாவில் மொத்த கொரோனா பாதிப்புக்கு எண்ணிக்கை 949 எட்டியுள்ளது. 6 கோரிக்கைகளை நிறைவேற்றி தர கோரி கேரளா உயர் நீதிமன்றத்திற்கு தமிழக அய்யப்ப பக்தர்கள் மின்னஞ்சலை அனுப்பி வருகிறார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடுமையான கூட்ட நெரிசல் காணப்படுவதால் பல மணி நேரமாக காத்திருந்தும் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 6 கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கோரி கேரளா உயர்நீதிமன்றத்திற்கு தமிழக பக்தர்கள் மின்னஞ்சல்களை அனுப்பி வருகின்றனர்.
அதில் நிலக்கல் முதல் பம்பை வரை போலீசாரின் உதவியுடன் பக்தர்களை பேருந்து ஏற்ற முயன்றும் ஒரு பேருந்தில் 80 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
மேலும் குழந்தைகள் மற்றும் வயதான பெண்களுக்கு சிறப்பு வரிசை ஏற்படுத்த வேண்டும் எனவும் பாம்பே முதல் சன்னிதானம் வரை பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.





