சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனின் மனைவி மற்றும் மகனுக்கு கொரொனா பாசிடிவ்..!
சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் 4 பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனது மாமனார் மாமியார் ஆகியோருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து குடும்பத்தினருடன் ராதாகிருஷ்ணன் பரிசோதனை செய்து கொண்டார்.
இதில் அவருடைய மனைவி மற்றும் மகனுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் கிங்ஸ் கொரொனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை ராதாகிருஷ்ணன் ட்விட்டர் மூலம் அளித்த பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார் .இதனிடையே குடும்பத்தினர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் ராதாகிருஷ்ணனும் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.







