சேலம் அரசு மருத்துவமனையில் 2 மருத்துவர்கள் மற்றும் 20 செவிலியர்களுக்கு கொரோனா..!
சேலம் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் இரண்டு மருத்துவர்கள் மற்றும் 20 செவிலியர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரொனாவால் பாதிக்கப்பட்டாலும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பாதிப்பு குறைவாகவே உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் வீடு மற்றும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் எனவும் குறிப்பிடப்படுகிறது.






