--- --:--:-- --

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழப்பு..! பலி எண்ணிக்கை 5 ஆனது!!

sdg

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விறுவிறுவென உயரும் அதேவேளையில், பலி எண்ணிக்கையும் 5 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இருவர் உயிரிழந்த நிலையில், இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மேலும் இருவர் பலியாகியுள்ளனர்.

 

உலக நாடுகளை பெரும் பீதியிலும், அச்சத்திலும் உறையச் செய்துள்ள கொரோனா வைரசின் கோரத் தாண்டவம் இந்தியாவிலும் விஸ்வரூபமெடுக்கத் தொடங்கி விட்டது. கடந்த ஒரு வாரத்தில் வைரஸ் பரவல் விறுவிறுவென அதிகரித்து இன்று பாதிப்பு எண்ணிக்கை 3600ஐ கடந்துள்ளது. பலி எண்ணிக்கையும் செஞ்சுரி அடித்துள்ளது.

 

தமிழகத்திலும் நான்கே நாட்களில் தினமும் அதிகரித்து பாதிப்பு எண்ணிக்கை 485 ஆகியுள்ளது. ஏற்கனவே மதுரையைச் சேர்ந்த நபர் உயிரிழந்த நிலையில், நேற்று தேனியில் ஒரு பெண், விழுப்புரத்தில் ஒரு பள்ளி தலைமை ஆசிரியர் என 2 பேர் உயிரிழந்து பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்திருந்தது. இந்நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் இன்று உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon