தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசிக்கிறார்..!
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் பணிகள் வேகம் எடுத்திருக்கும் நிலையில் நாகை மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசிக்கிறார். மாலை 4 மணிக்கு காணொளி மூலமாக இந்த கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட பரிசோதனை அனைத்து மாவட்டங்களிலும் முடிவடைந்து இருப்பதாகவும் ஒப்புகைச் சீட்டு உடன் கூடிய இயந்திரங்களின் முதற்கட்ட சோதனையில் நிறைவடைந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு முறையை செயல்படுத்துவதற்காக தொகுதிக்கு 12 குழுக்களை அமைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.






