அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு..!
காற்றின் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூர் பெட்டி பகுதிகளில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.






