இரவு நேர ஊரடங்கை நடைமுறைப்படுத்த மத்திய அரசு பரிந்துரை..!
கேரளத்திலும், மகாராஷ்டிராவிலும் கொரொனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் அங்கு இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. வெள்ளியன்று கேரளாவில் 30 ஆயிரம் பேருக்கும், மகாராஷ்டிரத்தில் 5,108 பேருக்கும் கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்திய மாநிலத்தின் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோருடன் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை செயலாளர் மூலம் கலந்துரையாடினார். தடுப்பு நடவடிக்கை பற்றி ஆய்வு செய்யும்படி அறிவுறுத்தியுள்ளார்.
கொரொனா அதிகரிப்பை கட்டுப்படுத்த இன்னும் அதிக முயற்சிகள் தேவைப்படுவதாகவும் இரவு நேர ஊரடங்கை நடைமுறைப்படுத்தலாம் என்பதை பரிசீலிக்க முடியும் என கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.







