அண்ணனின் திருமணத்திற்கு தம்பி வழங்கிய புதுவித பரிசு..!
தமிழர்களின் பாரம்பரிய கலைகளை வலியுறுத்தி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அண்ணனுக்கு திருமண பரிசாக ஜல்லிக்கட்டு காளைகளை தம்பி வழங்கினார். ராஜாராம் என்பவருக்கு திருமணம் நடைபெற்றது.
அப்பொழுது கல்யாணப்பரிசாக ஜல்லிக்கட்டு காளை இரண்டு ஆடு கிடாய்கள், 2 சண்டை சேவல்கள் ஆகியவற்றை ராஜாராமின் தம்பி அவரது நண்பர்களும் வழங்கினார். ஜல்லிக்கட்டு காளைக்கு முத்தமிட்ட மணமகள் மகிழ்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





