தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த ஐந்து நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த ஐந்து நாட்களுக்கான முன்னறிவிப்பை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





