சரக்கு வேனில் இருந்து விழுந்த பிஸ்கட் பாக்கெட்டுகள்.. புலம்பிய ஓட்டுனர்..!
ஆந்திர மாநிலத்தில் சரக்கு வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பிஸ்கட் பாக்கெட்டுகளை வாகன ஓட்டிகள் போட்டி போட்டுக் கொண்டு எடுத்து சென்றனர்.
இதனை வேனின் ஓட்டுனர் கவனிக்காமல் சென்றதால் வேனின் பின்னால் சென்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் போட்டி போட்டுக் கொண்டு பிஸ்கட் பாக்கெட்டுகளை அள்ளி சென்றனர்.
இதையறிந்து வேன் ஓட்டுனர் சிறிது தூரம் சென்ற பிறகு திரும்பி பார்த்ததால் அதற்குள் பிஸ்கட் பாக்கெட்டுகளை அள்ளி சென்றதால் உரிமையாளருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் புலம்பியபடி நின்றார்.






