தொழில் அமைதியை சீர்குலைக்க முயற்சி: சாம்சங்
ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிற்சாலையில் 16வது நாளாக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தொழிற்சாலையில் அமைதியை சீர்குலைக்க முயற்சி நடப்பதாக சாம்சங் நிர்வாகம் குற்றஞ்சாட்டியுள்ளது. ஊழியர்கள் நிறுவனக் கொள்கைகளுக்கு இணங்கி நடக்க அறிவுறுத்தியதுடன், அதனை மீறுபவர்கள் மீது ஒழங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.





