சீமானை உடனடியாக கைது செய்க…! – வாய்ஸ் ஆஃப் தமிழ்நாடு வலியுறுத்தல்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யக்கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது வாய்ஸ் ஆப் தமிழ்நாடு நிறுவனத்தின் நிறுவன தலைவரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான ராஜசேகரன் தலைமையில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் சீமானை உடனடியாக கைது செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சீமான் பேசி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்






